×

நெல்லை அருகே தலை துண்டித்து காதல் மனைவி படுகொலை: கள்ளத்தொடர்பால் கணவர் வெறிச்செயல்

நெல்லை:  தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் சொரிமுத்து (35). இவர், கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அச்சன்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த ரம்லத் (31) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு விட்டு வேலைக்காக சொரிமுத்து கேரளாவிற்கு சென்றார். இரு மாதங்களுக்கு ஒருமுறை விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு வந்து செல்வார்.இந்நிலையில் வாலிபர் ஒருவருக்கும், ரம்லத்துக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 1ம் தேதி இரவில் ரம்லத்தும், வாலிபரும் தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த சொரிமுத்துவின் உறவினர்களை கண்ட வாலிபர் வீட்டின் பின்புறம் வழியாக தப்பியோடினார்.

ரம்லத்தை  ஒரு அறையில் அடைத்து வைத்து இரு பெண்களை காவலுக்கு வைத்தனர். ஆனால் ரம்லத் காவலுக்கு இருந்தவர்களை ஏமாற்றி விட்டு கடந்த 2ம் தேதி இரவு வீட்டில் இருந்து தப்பினார். சொரிமுத்து குடும்பத்தினர் ரம்லத்தை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கடந்த 3ம் தேதி, சொரிமுத்துவின் சகோதரர் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த சொரிமுத்து நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். அவருக்கு அரசு மருத்துவர்கள் நடத்திய மருத்துவ சோதனையில் நோய் தொற்று இல்லை என தெரிய வந்தது. நேற்று அதிகாலையில் சொரிமுத்து, ரம்லத்தின் செல்போனில் தொடர்பு கொண்டு உன்னை மன்னித்து விட்டேன். குழந்தைகளுக்காக குடும்பம் நடத்த வருமாறு தெரிவித்தார். இதனை நம்பிய ரம்லத், கணவரிடம் குறிச்சி குளம் வாய்க்கால் பாலத்திற்கு வந்து விடுவதாகவும், அங்கிருந்து அழைத்து செல்லவும் என்றார்.

வாய்க்கால் பாலம் முட்புதரில் அரிவாளை மறைத்து வைத்து விட்டு, மனைவிக்காக சொரிமுத்து காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ரம்லத்திடம், ெசாரிமுத்து பேச்சு கொடுத்தபடி முட்புதரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரம்லத், உயிர் பிழைக்க தப்பியோடினார். இருப்பினும் ஆத்திரத்துடன் அவரை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொன்று விட்டு தாழையூத்து போலீசில் சொரிமுத்து சரணடைந்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் விசாரணை நடத்தி ரம்லத் உடலை பிரேத பரிசோதனைக்கு நெல்ைல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாழையூத்து போலீசார் வழக்கு பதிந்து சொரிமுத்துவை கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர். சொரிமுத்து அளித்துள்ள வாக்குமூலத்தில், மனைவியின் கள்ளக்காதலால்  உறவினர்களிடம் அவமானம் ஏற்பட்டு அவரை கொலை செய்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Paddy Husband ,beheading ,love affair , head , paddy, Husband, wife, murdered ,
× RELATED தமிழர்களை அடிக்கடி கேலி செய்த வடமாநில...