×

கொரோனா பரவலைத் கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது : சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங் : கொரோனா பரவலைத் கட்டுக்குள் வைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் தோன்றியதாகவும் சீனா அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த தவறி விட்டது என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்குற்றம்சாட்டி வருகின்றன.கொரோன வைரஸ் தோன்றிய சீனாவில் கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், சீனா அதன் ஊரடங்கை முற்றிலும் தளர்த்தி, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.வணிக வளாகங்கள், நிறுவனங்கள், போக்குவரத்து என அனைத்தும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன. சீனாவில் மொத்தமாக 82,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 77,911 பேர் குணமாகியுள்ளனர். 4,633 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனாவைக் கட்டுக்குள் வைப்பது தொடர்பாக எதிர்கொண்டு வரும் நிச்சயமின்மையைப் பற்றி பகிர்ந்துகொண்டார். மேலும், கொரோனாவால் பாதிப்புக்குள்ளான நிறுவனங்களை மீட்பது குறித்தான திட்டங்களும் அக்கூட்டதில் பேசப்பட்டன.ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.8 சதவீதம் சரிந்தது. கொரோனா வைரஸ் பரவலால் சீனாவில் தொழில்செயல்பாடுகள் முடங்கியிருந்ததால் வேலையிழப்பு, சிறு குறு நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்றிருப்பது, வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன.இந்நிலையில் தொழில் செயல்பாடுகளை மீட்டெடுக்கும் வகையில், நிறுவனங்களுக்கு உத்தரவாதமில்லாத கடன்கள் வழங்கப்படும் என்றும் வட்டி மற்றும் கடன் செலுத்துவதற்கான கால அளவு நீட்டிக்கப்படும் என்றும் சீன அரசு அறிவித்துள்ளது.

Tags : Xi Jinping ,corona spread ,Chinese , Corona, spread, confine, challenge, Chinese President, Xi Jinping
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...