×

ஏர் இண்டியா சர்வதேச விமான சேவை தொடக்கம்..: 9-ம் தேதி முதல் லண்டன், சிங்கப்பூருக்கு விமான சேவை

டெல்லி: தேசிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பயணிகளின் நலன் கருதி மீண்டும் பயண சீட்டு முன்பதிவை ஏர் இண்டியா விமானம் தொடங்கியுள்ளது. அதன்படி நாளை முதல் இந்தியாவில் இருந்து லண்டன், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவுக்கு செல்பவர்கள் தற்போது முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை இந்திய கொண்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன. வளைகுடா நாடுகளுக்கும் விமானங்களை இயக்குவதற்கான அறிவிப்பை ஏர் இண்டியா நிறுவனம் இன்று வெளியிடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தும் மார்க்கங்களில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓ.சி.ஐ. அட்டை வைத்து இருப்பவர்கள், 6 மாதம் விசா வைத்து இருப்பவர்கள் மற்றும் இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவிவருவதால் மார்ச் 22-ம் தேதி முதல் வெளிநாடு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உள்நாட்டு விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Air India ,flights ,London , Air India ,start flights ,London ,9th
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...