×

மதுக்கடைகளை திறப்பது கொரோனா மேலும் பரவ வழிவகுக்கும்: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் கொரோனா  கட்டுக்கடங்காமல் போயிருப்பதற்கான முக்கியக் காரணங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளும், சமூக இடைவெளியும் முழுமையாக கடைபிடிக்கப்படாதது  தான். மதுக்கடைகள் திறக்கப்பட்டால் இந்த இரு விதிகளையும் பெயரளவுக்குக் கூட கடைபிடிக்க முடியாது. அது இன்னும் அதிக வேகத்தில் கொரோனா பரவுவதற்கே வழிவகுக்கும்.

அதுமட்டுமின்றி,  கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையைக் கூட மதிக்காமல் மீண்டும் மதுக்கடைகளை  திறப்பது கொரோனா அரக்கனுக்கு தமிழகத்தின் வாயில்களை நாமே திறந்து விடுவதற்கு  ஒப்பானது ஆகும். இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Opening ,liquor stores ,corona spread ,Corona ,Open Pub: Anbumani ,spread , Brewery, Corona, Anbumani
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு