×

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: ஆதார் அட்டை கட்டாயம்

திருவள்ளூர்:  திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 126 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் சென்னை காவல் மாவட்டத்தை ஒட்டியுள்ள செவ்வாப்பேட்டை, மீஞ்சூர், சோழவரம், வெள்ளவேடு, வெங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 10 டாஸ்மாக்  கடைகள் இன்று முதல் முழுமையாக இயங்காது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளை ஒட்டி 66  கடைகளும் இன்று முதல் இயங்காது.மற்ற 40 கடைகள், அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்கும். மேலும் ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன் வீதம் வழங்கப்படும்.

ஆதார், வாக்காளர் அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் உள்ளூர் நபர்களுக்கு மட்டுமே மதுபானம் வாங்க டோக்கன் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட மாட்டாது. திறக்கப்படும் கடைகளுக்கு முன்பாகபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். எனவே மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கி செல்லவும். இவ்வாறு அறிக்கையில் எஸ்.பி., அரவிந்தன் தெரிவித்துள்ளார்.



Tags : stores ,TASMAC , Task Shops, Adar, Corona, Curfew
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்