சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: இனி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருப்பது மக்களிடம் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்தபடியே அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்துகளையும் பட்டியலிட்டிருக்கிறார். இனிமேல் கொரோனாவால் பாதித்தோர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத நிலைக்கு பழனிசாமி அரசு வந்துவிட்டதா? என்று தோன்றுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.