×

உதவி மையம் அமைக்க முயற்சி 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது

களிய்காவிளை: ஊரடங்கு நேரத்தில் வெளியூர் செல்ல  இ பாஸ் வாங்க பொதுமக்களுக்கு உதவ குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் களியக்காவிளை செக்போஸ்ட் அருகே தகவல் உதவி மையம் அமைக்கும் பணியை நேற்று துவக்கினர்.  எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் உட்பட 25க்கு மேற்பட்ட காங்கிரசார் இந்த பணியில் ஈடுபட்டனர். அரசு அனுமதியின்றி மையங்கள் அமைக்க கூடாது என போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். காங்கிரசார் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து எம்எல்ஏக்கள் உள்ளிட்ட  13 பேரை போலீசார் கைது செய்து மதியம் விடுவித்தனர்.

Tags : Congress , Assistance Center, 2 Congress MLAs, arrested
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...