×

நாட்டிற்காக உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்துக்கு வாசன் இரங்கல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ராணுவப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் சந்திரசேகர் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. நாட்டைப் பாதுகாக்க தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மரணம் அடைந்தார் என்பது நாட்டிற்கு பெருமை. தமிழகத்துக்குப் பெருமை.  மேலும் பாதுகாப்பு படையினைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு பணிக்கு ஏற்ப அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் தொடர்ந்து செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்திரசேகர் மேற்கொண்ட பாதுகாப்புப் பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசு ரூ. 20 லட்சம் வழங்கி, அரசுப்பணியும் வழங்குவது சிறப்பானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : soldier ,Vasan ,country , Vasan, a dead soldier of Tamil Nadu soldier
× RELATED பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3...