×

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறிய தமிழக சித்த வைத்தியர் தணிகாசலம் சென்னையில் கைது!!

சென்னை : கொரோனா குறித்து வதந்தியை பரப்பியதாக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சித்த வைத்தியர் தணிகாலசத்தின் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர். தணிகாசலம் போலியான சித்த மருத்துவர் என்பது மட்டுமல்லாமல், அவர் ஏற்கனவே கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக இணையதளத்தில் செய்தி பரப்பினார். இந்த மருந்தை தமிழக அரசாங்கம் ஏற்றுக்கொண்டு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வந்த சித்த வைத்தியர் தணிகாசலம் தனது சமூக வலைதளங்கள் மூலம் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், சென்னை காவல்துறையிடம் புகாரளித்திருந்தது. மேலும் அவர் மருத்துவராக பணியாற்ற தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றத்தில் எவ்வித சான்றிதழையும் பெறவில்லை, அவர் போலி மருத்துவர் என்றும் தமிழ்நாடு சித்தமருத்துவ மன்றம் குற்றம் சாட்டியிருந்தது.

இதையடுத்து தணிகாசலம் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும், இணையத்தில் செய்தி வெளியிட்ட விவரங்கள் மற்றும் நேரங்கள் ஆகியவற்றை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, இன்று கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு தணிகாசலம் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Tamil Nadu ,Chennai ,psychiatrist , Coroner, Drug, Tamil Nadu, Siddhartha, Dhanikasalam, Chennai, Arrested
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...