×

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு..: வீடுகளுக்குமுன் எதிர்ப்பு பதாகைகளுடன் முழக்கம்

ஈரோடு: ஈரோட்டில் மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டத்தை முன் எடுத்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் மூன்றாவது மண்டலத்துக்கு உள்பட்ட மாதேஸ்வரன் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஒவ்வொரு வீடுகளுக்கு முன்பும் பெண்கள் குழந்தைகள் என குடும்பமாக நின்று கோரிக்கை அட்டைகளை உயர்த்தி காட்டினார். சாமானிய மக்கள் உணவுக்கே திண்டாடி வரும் நிலையில், தமிழக அரசு இது போன்ற டாஸ்மாக் கடைகளை திறப்பது குடும்பங்களை மேலும் சீரழித்துவிடும் என்பது ஈரோடு மக்களின் ஆதங்கமாகும்.

Tags : task force shops ,task force ,Erode , Opposition ,open, task,Erode
× RELATED விருதுநகர் மக்களவை தொகுதி பாஜ தேர்தல்...