×

பண்ணை வீட்டில் சல்மானுடன் நட்சத்திரங்கள்: அதிகாரிகள் விசாரணை

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், மான் வேட்டை, ரசிகர்களை அடித்தல், செல்பி எடுத்தால் செல்போனை பறித்தல், அடுத்தடுத்த நடிகைகளுடன் நெருக்கம் என எப்போதும் பரபரப்பாக இருக்கிறவர் . அதே சமயம் பல்வேறு தொண்டு பணிகளுக்காக அவர் பாராட்டப்படுகிறார். அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. ஆனால் இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். சல்மான்கான் தற்போது  மும்பை பன்வல் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டில் அவருடன் நடிகைகள் லுலியா வண்டூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட சில நடிகைகள், மற்றும் நடிகர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு மும்பையில் சொந்த வீடு உள்ளது.

சல்மான்கான் தன் பண்ணை வீட்டில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, கோதுமை, மளிகை சமான்களை அனுப்பினார். இதனை வாகனங்களில் ஏற்றும் பணிகளை செய்தவர்கள் அவருடன் தங்கியிருக்கும் நடிகைகளும், நடிகர்களும்களும்தான். இந்த விடியோவும் வெளியானது. இதன் மூலம் நடிகைகளுடன், சல்மான்கான் பண்ணை வீட்டில் இருப்பது உறுதியானது. சல்மான்கான் பண்ணை வீட்டில் நடிகைகள் ஹாயாக படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கும் படங்களும் வெளிவந்துள்ளது. கொரோனா சமயத்தில் இதுபோல் கூட்டம் சேர்த்ததால் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Salman ,farmhouse , Salmankan, Stars, Deer Hunting, Inquiry
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...