×

போலீஸ் காவலில் 2ம் நாளாக விசாரணை காசியிடம் ஏமாந்த பெண்களின் பட்டியலை தயாரிக்கும் போலீசார்: தடயங்களை அழிக்கும் கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

நாகர்கோவில்:  நாகர்கோவில், கணேசபுரம் ரோட்டை சேர்ந்தவர் காசி(26) என்ற சுஜி. இவர் சென்னையை சேர்ந்த இளம்பெண் டாக்டர் ஒருவரை காதலிப்பது போன்று நடித்து, ஆபாச படம் எடுத்து அதனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். மேலும் அவரை மிரட்டி ரூ.6.60 லட்சம் பணம் பறித்துள்ளார். இததொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் காசியை கைது செய்தனர்.  காசி மீது பல புகார்கள் வந்ததையடுத்து  குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர். அவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார்  காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை எஸ்.பி. நாத்தின் நேரடி பார்வையில் நடைபெற்று வருவதால் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக காசியிடம் ஏமாந்த பெண்கள் தொடர்பான பட்டியலை சேகரித்து வருகின்றனர். அவர் வசம் உள்ள வீடியோ, போட்டோ காட்சிகளை அவரை கொண்டு  அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள், மாநில வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. சென்னையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சேகரித்து  அந்தந்த பகுதி போலீசாருக்கு அனுப்பி, பாதிக்கப்பட்டவர்கள் நிலையை அறியவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே காசி கைது செய்யப்பட்டவுடன் அவரது இ-மெயில் தகவல்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. காசி போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இ-மெயில் தகவல்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags : Investigators ,Police Detention Police ,Women ,police investigation ,Kashi ,girls , Police custody, kasi, women
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது