×

டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: மே 7 அன்று டாஸ்மாக்- மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, 6ம் தேதி(இன்று) காலை 11 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டம் அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்’ என முழக்கம் எழுப்பும் வகையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

பேரிடர் காலத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்த மக்கள் விரோத முடிவைக் கண்டித்தும், டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று நடைபெறவுள்ள அறப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.


Tags : Tamil Nadu ,Thirumavalavan ,Thirumavalvan Announcement ,stores , Task Shops, Tamil Nadu, Thirumavalavan
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து...