×

தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா: சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு பாதிப்பு உறுதி: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,058- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,433லிருந்து 46,711- ஆக உயர்ந்துள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12,727 லிருந்து 13,161-ஆக அதிகரித்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 1,583- ஆக உயர்ந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,485 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 76 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் இதுவரை 1,65,191 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 11,702 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 52 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.

* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,745 ஆண்கள், 1,311 பெண்கள், 2 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் ஆரஞ்சு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்து சிவப்பு மண்டலங்களாக மாறி வருகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* பாதுகாப்பு வளையத்திற்குள் தான் தமிழகம் உள்ளது.

* நீலகிரி மாவட்டத்தில் 25 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

* முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 மூதாட்டிகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியது. சென்னையில் இன்று 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Madras, Health Department
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...