சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் தெலுங்கு படம் ஆச்சார்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க திரிஷா ஒப்பந்தமானார். பின்னர் திடீரென அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வானார். இப்போது தீடீரென சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் பரவியது. அதில், ஆச்சார்யா படத்திலிருந்து காஜல் விலகிவிட்டதாக கூறப்பட்டது. இது பற்றி அறிந்து காஜல் அகர்வால் தரப்பில் கூறும்போது, ‘ஆச்சார்யா படத்திலிருந்து நான் விலகிவிட்டதாக சொல்வதில் உண்மை இல்லை. இது போல் பொய் தகவல்களை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை’ என்றார்.