×

தமிழ் சினிமா பணிகள் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்: அமைச்சரிடம் திரைப்பட துறையினர் கோரிக்கை

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து தமிழக செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, முதல்வரின் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தற்போது 11 தொழில்துறைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியதை போல், திரைப்பட துறைக்கும் படத்தொகுப்பு, ஒலிச்சேர்க்கை, கிராபிக்ஸ், பின்னணி இசை  என குறைந்த நபர்களே பணியாற்றும் இறுதிக்கட்ட பணிகள் செய்வதற்கு, ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கேட்டுக்கொண்டபடி, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறோம் இதன்மூலம் அந்த பணிகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும்.

கேரளா அரசாங்கம் இந்த பணிகளுக்கு நேற்று முதல் அனுமதி அளித்துள்ளதை நினைவுபடுத்துகிறோம். இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை பாரதிராஜா, கலைப்புலி எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், கேயார், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், பி.எல்.தேனப்பன், பைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் உள்பட பலர் கேட்டுள்ளனர்.


Tags : Government ,Tamil ,Tamil Cinema , Tamil cinema, government, filmmaking department
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...