×

தீவிரவாதிகள் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கிரால்கண்ட் பகுதியில் வாங்கம் காஜியாபாத்தில் உள்ள சிஆர்பிஎப் நாகா கட்சி கூட்டம் நடந்தது. அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கூட்டத்தின்மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில்  சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : CRPF ,soldiers ,Terrorist attack , Terrorists attack, 3 CRPF soldiers killed
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை