டெல்லி: வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி மே 7-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எந்தெந்த நாடுகளில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற விவரங்களை தூதரகங்கள் சேகரிக்கின்றன. வெளிநாடுகளில் உள்ளவர்களில் எவ்வளவு பேர் தாயகம் திரும்ப விரும்புகின்றனர் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.