×

கொரோனா பாதித்த தங்களது பகுதியில் இதுவரை கிருமிநாசினி தெளிக்கவில்லை

* மூதாட்டியின் கதறல் வீடியோ  
* சமூக வலைதளங்களில் வைரல்

பெரம்பூர்: பேசின்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பேசும் வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ‘‘எனது பக்கத்து வீட்டில் கொரோனாவால் பாதித்தவர் உள்ளார். அந்த வீட்டை சேர்ந்த பெண் தினமும் எங்களது வீட்டில் வந்து பேசி விட்டு செல்வார். பலமுறை கண்டித்தும் அவர் தொடர்ந்து இந்த தெரு வழியாக நடந்து செல்வதும், பொதுமக்களுடன் பேசுவதுமாக இருந்தார். இந்நிலையில், நான் சந்தேகத்தின் பேரில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு வந்தேன். தற்போது எனக்கு கொரோனா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சிறிது நேரத்தில் என்னை அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வர உள்ளது. நான் மருத்துவமனைக்கு சென்று விட்டால், எனது பிள்ளைகளுக்கு யார் உணவு செய்து தருவார்கள், என தெரியவில்லை. இதுவரை மாநகராட்சி ஊழியர்கள் ஒருவர் கூட எங்களது வீட்டு பகுதியில் வந்து மருந்து தெளிக்கவில்லை. இதனால், பலருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது,’’ என பேசும் அவர் இறுதியில் கண்ணீர் விட்டு அழுகிறார்.புளியந்தோப்பு பகுதியில் நோய் தொற்று அதிகமாக இருந்தும், தூய்மை பணிகள் முறையாக நடைபெறுவதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : area , Corona, disinfectant, curfew
× RELATED வாட்டி வதைக்கும்...