×

சீனாவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா

பீஜிங்: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், தற்போதும் ஒருசிலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி  வருகின்றனர். நேற்று முன்தினம் 14 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 12 பேருக்கு எந்த  அறிகுறியும் இல்லை என்றும் சீன தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. இதுபோன்று, காய்ச்சல், சளி, இருமல் என எந்த அறிகுறியும் இன்றி நோயால் பாதிப்பவர்களால்தான் வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு வேகமாக  பரவும் என சுகாதார ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. துற்போது அவரை அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,877 ஆகவும் பலியானோர்  எண்ணிக்கை 4,633 ஆகவும் உள்ளது. 531 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Tags : Corona ,newcomers ,China , Corona , China
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...