×

ஊரடங்கு நீட்டிப்பால் தொழிலாளி தற்கொலை

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சங்கோதி பாளையத்தை சேர்ந்தவர் இளையரசு. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த சில  மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார்.  இந்நிலையில், ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதன்காரணமாக, மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்தார். தனது  நண்பர்களிடம், மனைவியும் இல்லை, இப்போ சரக்கும் கிடைக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இந்த நிலையில், ஊரடங்கு மே 17ம் தேதி வரை  நீடிப்பு என்ற தகவல் கிடைத்ததும், விரக்தியடைந்த இளையரசு நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து  போலீசார்  விசாரித்து வருகின்றனர்.



Tags : Worker suicide . curfew extension
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...