×

காஞ்சிபுரம் நகர 35வது வார்டு திமுக சார்பில் 2 அம்மா உணவகங்களுக்கு 1 டன் அரிசி, முகக்கவசங்கள்

காஞ்சிபுரம்:  தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர், காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் ஜி.செல்வம் மற்றும் திமுக  மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் அறிவுறுத்தல்படி காஞ்சிபுரத்தில் உள்ள 2 அம்மா உணவகங்களுக்கு காஞ்சிபுரம் நகர  35வது வார்டு திமுக சார்பில் எஸ்.கே.பி.சீனிவாசன், 1 டன் அரிசி, 500 முகக்கவசங்கள், 500 சானிடைசர்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம்  வழங்கினார். இதில், இளைஞரணி நிர்வாகிகள் எஸ்.கே.பி.கார்த்திக், எஸ்.கே.பி.எஸ்.சரவண பெருமாள், முத்துக்குமார், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : mom restaurants ,Kanchipuram 35th Ward DM. ,DMK 2 ,Kanchipuram City 35th Ward ,rice amma unavagam , Kanchipuram, DMK, 2 amma unavagam, 1 ton of rice, masks
× RELATED 30ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு