×

திமுக சார்பில் 5000 குடும்பத்துக்கு நிவாரணம்

காஞ்சிபுரம்:  தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்  ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர். அந்தவகையில், காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை, திருப்பருத்திகுன்றம், பருத்திக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பத்தினர்  மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி என 15 வகை பொருள் அடங்கிய நிவாரண உதவிகளை காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன் ஆகியோர் வழங்கினர். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண பொருட்களை பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை திமுக நிர்வாகி அன்பில் பொன்னா செய்திருந்தார்.


Tags : DMK DMK , DM, relief, corona
× RELATED எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் 1,000 பேருக்கு நிவாரணம்