×

கொரோனா பரிசோதனை ஊத்துக்கோட்டை போலீசார் நிம்மதி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் எல்லைக்கு உட்பட்ட ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூர்பேட்டை  ஆகிய காவல் நிலையங்களில் 115 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், காவல் துறையினருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பி அரவிந்தன் உத்தரவிட்டார். அதன்பேரில், ஊத்துக்கோட்டை போலீசாருக்கு கடந்த 30ம் தேதி  ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் டாக்டர் பிரபாகரன் தலைமையில் கொண்ட மருத்துவ குழுவினர்  கொரோனா பரிசோதனை செய்தனர்.  இந்த பரிசோதனையின் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 115 போலீசாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.



Tags : Corona Inspection Police , Corona, uttukkottai, police
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...