நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் தொடர்ந்து சமூக பிரச்னைகள் பற்றி பேசி வந்தார் சித்தார்த். குறிப்பாக மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அவர் விமர்சித்து வந்தார். சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட அவர், அந்த சட்டத்தை எதிர்த்து தனது ட்விட்டரில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவரது ட்விட்டர் பக்கம் காணாமல் போயுள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதால் அவரது ட்விட்டர் பக்கம் சிலரால் முடக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே சமயம் அவர் தனக்கு ட்விட்டர் பதிவுகளால் மிரட்டல் வருகிறது என்று புகார் கூறியிருந்தார். அதனால் அவரே ட்விட்டரிலிருந்து விலகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி கேட்க சித்தார்த்தை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.