×

திருவான்மியூர் மார்க்கெட் வரும் புதன் கிழமை முதல் செயல்பட தொடங்கும்

சென்னை: சென்னையில் மூடப்பட்ட திருவான்மியூர் மார்க்கெட் வரும் புதன் கிழமை முதல் செயல்பட தொடங்கும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 62 வயது வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. பின்னர் அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பகுயில் அமைக்கப்பட்ட சந்தை அங்கிருந்து வாகன நிறுத்தும், வடக்கு மாட வீதி மற்றும் கிழக்கு மாட வீதி என மூன்று பகுதிகளுக்கு மாற்றப்பட்டது. அப்பகுதியில் மேலும் சில இடங்களைக் கண்டறிந்து அங்கெ சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு மே -6ம் தேதி புதன்கிழமை முதல் அவை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvanmiyur , Thiruvanmiyur Market, Wednesday
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...