சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வுக்கான அரசாணையை உடனே ரத்து செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வரியை உயர்த்துவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது எனவும் கூறினார்.