லண்டன் : தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டவுடன் தமது மரணத்தை அறிவிக்க மருத்துவர்கள் தயாராக இருந்ததாக பிரிட்டனில் வெளியாகும் சன் இதழுக்கு அளித்த பேட்டியில் பிரிட்டிஷ் பிரதமர் போரீஸ் ஜான்சன் பரபரப்புத் தகவல் அளித்துள்ளார்.தீவிர கண்காணிப்புப் பிரிவில் தான் அனுமதிக்கப்பட்டது இக்கட்டான தருணம் என்பதில் ஐயமில்லை என்றும் தான் இறந்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூட திட்டமிட்டு இருந்தனர் என்றும் பிரதமர் போரீஸ் ஜான்சன்தெரிவித்தார். தனது நிலைமை மோசமாகிவிட்டால் என்னென்ன செய்வது என்பதையும் மருத்துவர்கள் திட்டமிட்டு இருந்ததாகவும் அவர் கூறினார்.,