×

அவசர பயணத்துக்கு அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  கொரோனா பரவலை தடுக்க சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களுடைய சில குறிப்பிட்ட அத்தியாவசிய நிகழ்ச்சிகளான முன்கூட்டியே ஏற்பாடு செய்த திருமணங்கள், இறுதிச்சடங்குகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள அனுமதி சீட்டு சென்னை மாநகராட்சியால்  வழங்கப்பட்டு வந்தது.  தற்போது தமிழ்நாடு அரசு  மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையின் வாயிலாக வாயிலாக http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே அவரச அனுமதி சீட்டு வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி  முன்கூட்டியே நிச்சயம் செய்யப்பட்ட  திருமணங்கள்,  அவசர மருத்துவ சிகிச்சை (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) மற்றும் எதிர்பாரத விதமான மரணம்  (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்)  அரசு வழிகாட்டுதலின்படி அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது.  எனவே http://tnepass.tnega.org என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பித்து பயண அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே, அவசர அனுமதி சீட்டு பெற  சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Municipal Commissioner , Emergency Travel, Online, Application, Municipal Commissioner
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...