திண்டுக்கல்: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது மனைவி கண்ணாத்தாள் (67). திண்டுக்கல், நாகல் நகர், மெண்டோசா காலனியில் உள்ள மகன் வெங்கடேசன் வீட்டில் வசித்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த கண்ணாத்தாள், நேற்று காலை மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி உள்ளிட்டோர், திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பழநி திமுக எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை கோவிந்தாபுரம் மின்மயானத்தில் கண்ணாத்தாள் உடல் தகனம் செய்யப்பட்டது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மறைவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.