×

டெல்லியில் ஒரே பட்டாலியனில் 122 சிஆர்பிஎப் வீரருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் 122 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் துணை ராணுவ படை வீரர்கள் 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே மயூர் விகார் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 31வது பட்டாலியனை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்தப் படைப்பிரிவில் மேலும் பல வீரர்களுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் 100 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுகள் வந்த பின்பே மேலும் பலருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என் தெரியவரும். இதன் மூலம்கொரோனா பாதித்த சிஆர்பிஎப் வீரர்களின் எண்ணிக்கை 122ஆக உயர்ந்துள்ளது. டெல்லி்என்சிஆர்பகுதியை சேர்ந்த வீரர் மூலம் நோய் பரவி இருக்கலாம் எனவிசாரணையில் தெரியவந்துள்ளது.


Tags : player ,battalion ,Delhi ,CRPF ,Corona , Delhi, 122 CRPF Player, Corona
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...