கொரோனா ஊடரங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் மக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கிறது. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், தற்போது புகை பிடிக்க முடியாமல் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு வருகிறார்கள். புகை பிடிப்பவர்களை கொரோனா விரைவில் தாக்கும் என மருத்துவ முடிவுகள் வெளிவந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நடிகை மது பாட்டிலுடன் போஸ் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராய் லட்சுமி சுருட்டு பிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த படம் புகைப்பிடிப்பவர்களின் ஆவலைத் தூண்டுவது போல உள்ளது என்றும். இந்த நேரத்தில் நடிகைகள் இளைஞர்களின் மனதை கெடுப்பது மாதிரியான படங்களை வெளியிடக்கூடாது என்றும் ராய் லட்சுமிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.