×

கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள் மீது சுகோய் போர் விமானங்கள் மலர் தூவி மரியாதை

கொல்கத்தா: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மருத்துவமனைகள் மீது போர் விமானங்கள் மலர் தூவும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் விமானப்படையின் கிழக்கு பிரிவு அதிகாரி கூறியதாவது: கொல்கத்தாவில் உள்ள  பெலிகட்டா அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு விமானப்படையின் ஹெலிகாப்டர் மலர் தூவி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளது.

இதே போல, அசாமில் கவுகாத்தி, அருணாச்சலில் இடாநகர், மேகாலயாவில் ஷில்லாங் அரசு பொது மருத்துவமனைகள் மீதும் மலர் தூவப்பட உள்ளது. கவுகாத்தியில் திஸ்பூரில் உள்ள சட்டப்பேரவை சுகோய்-30 ரக போர் விமானங்கள் அணி வகுப்பு நடத்த உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Corona Treatment Hospitals , Corona treatment, hospitals, airplanes
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...