டெல்லி: 2 முறை ஊரடங்கை தொலைக்காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேரடியாக அறிவித்தார். இந்த முறை பிரதமர் நாட்டு மக்களுக்கு ஊரையாற்றவில்லை உள்துறை செயலர் ஓர் அறிக்கை மட்டுமே வெளியிட்டார். ஊரடங்கை 3.0 என்ற நோக்கத்துக்காக பிறப்பிக்கப்பட்டது என்று விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஊரடங்கு 3.0 மே 17ஆம் நாள் முடிந்த பிறகு அரசு என்ன செய்யப் போகிறது என்பதையும் அரசு விளக்க வேண்டும் எனவும் கூறினார்.