×

தென்காசி மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து நாளை தென்காசி மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், மூடல், வீட்டை விட்டு வெளியே வரமால் 100% சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசியமான மருந்து கடைகள், அம்மா உணவகங்கள் திறந்து இருக்கும். இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும். மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : district ,Tenkasi , Tenkasi, full curfew, collector
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...