சென்னை: சென்னையில் தங்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக் கோரி வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகரின் கிண்டி, வேளச்சேரி, முகப்போர் உள்ளிட்ட பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் தங்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுமதி அளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.