சென்னை: பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது. 1.73 லட்சம் பொறியியல் இடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கியது. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியவுடன் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.