×

கொரோனாவால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலவுவதால் ஊரடங்கை தளர்த்துவதில் மிகுந்த கவனம் தேவை : WHO எச்சரிக்கை


நியூயார்க் : கொரோனா எதிரொலியாக உலகளாவிய சுகாதார நெருக்கடி இன்னும் நீடிப்பதால் ஊரடங்கை தளர்த்துவதில் மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உலகையே நிலைகுலைய செய்துள்ள கொரோனா வைரஸ் 212 நாடுகளில் 34 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இதன் தாக்குதலில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரை பலிகொடுத்துள்ளனர். கொரோனா பரவலால் கடந்த 3 மாதங்களாக உலகமே முடங்கி போயுள்ள நிலையில், ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இறங்கியுள்ளனர்.

ஆனால் இது போன்ற தருணங்களில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஜனவரி 20ம் தேதி அறிவிக்கப்பட்ட உலகளாவிய சுகாதார நெருக்கடி 3 மாதங்களை கடந்து தற்போதும் நீடிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் வறுமையில் வாடும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பதை யூகிக்க முடியவில்லை என்று அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


Tags : crisis ,Corona ,WHO ,World Health Crisis , Corona, world, health, crisis, curfew, relaxation, focus, need, WHO, warning
× RELATED பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!