×

டிஜிபி ஆபீசையும் விட்டு வைக்கவில்லை அமைச்சு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்த அமைச்சுபணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த அமைச்சுபணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய அமைச்சுபணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று வந்த அமைச்சு பணியாளரின் குடும்பத்தினரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர் பணியாற்றி தொழில் நுட்ப பிரிவு முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி அடித்துள்ளனர். காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Coroner ,office ,ministry staff ,DGP , DGP Office, Corona
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...