×

ஷூட்டிங் இல்லாததால் போட்டோ ஷூட் நடத்தும் நடிகைகள்

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் சும்மா இருக்கும் நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சினிமா தொடர்பான படப்பிடிப்புகள், பிற பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுள்ள நடிகைகள், மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா, உடற் பயிற்சி, செல்ல பிராணிகளுடன் விளையாடுவது என்று நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகைகள் பலரும் பல விதமான போஸ்களை கொடுத்து போட்டோ ஷூட் நடத்துவதில் பிசியாக உள்ளனர்.

வழக்கமாக பட வாய்ப்புகளுக்காக இதுபோல் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும்போது போட்டோ ஷூட் நடத்த அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இப்போது வீட்டில் சும்மா இருப்பதால் நடிகைகள் காஜல் அகர்வால், ஆண்ட்ரியா, அமலா பால், ராஷ்மிகா, ரெஜினா, இலியானா, பூஜா ஹெக்டே, அதா சர்மா உள்பட பலர் போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : Actresses ,shooting , Shooting, photo shoe, actresses, curfew
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...