×

முதல்வர் பாதுகாப்பு பிரிவு எஸ்பிக்கு 13 மாதம் பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: முதல்வர் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜாவுக்கு மேலும் 13 மாதம் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளராக ராஜா பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவரது பணிக்காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.  இவர், முதல்வருக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவரது பணிக்காலம் மேலும் 13 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக, கொரோனா பணிக்காலத்தில் மருத்துவர்களுக்கு தான் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.  ஆனால், காவல் துறையில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Tamil Nadu ,govt ,CM ,Chief Security Division , Chief Minister of Defense, SP, Extension, Corona, Curfew
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...