டெல்லி: டெல்லியில் கொரோனாவுக்கு ஆரம்ப கட்ட பிளாஸ்மா தெரபி சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றால் 3,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தொற்றில் இருந்து 1,094 பேர் குணமடைந்த நிலையில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.