சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி பிரதீபா மர்மமான முறையில் கல்லூரி விடுதியில் உயிரிழந்துள்ளார். கல்லூரி விடுதியில் மாணவி உயிரிழந்தது குறித்து சுகாதார செயலாளர், கல்லூரி முதல்வர் ஆகியோரும் விசாரணையில் உட்படுத்தப்பட்டுள்ளனர். மாணவியின் மரணம் குறித்து முழுமையாக விசாரிக்க சமூக சமுத்துவத்திற்கான மருத்துவ சங்கம் வலியுறுத்தி வருகிறது.