×

படகினுள் ஏறி மீனவரை இழுத்து சென்றது புலி

பாருய்பூர்: மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள லாகிரிபூரை சேர்ந்த சுஜித் மோண்டல் அவரது இரண்டு நண்பர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை மீன்பிடிக்க கலிச்சார் பகுதிக்கு சென்றார். அப்போது சுந்தரவனக் காட்டில் சிறிய ஓடை பகுதியை கடந்தபோது, புதரில் பதுங்கி இருந்த புலி படகிற்குள் பாய்ந்து, சுஜித்தை இழுத்து கொண்டு காட்டிற்குள் சென்று மறைந்தது. இதுகுறித்து அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் அப்பகுதிகளில் தேடி வருகின்றனர். இன்னமும் சுஜித் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.


Tags : fisherman , The fisherman, the tiger
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...