சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: எம்எம்எஸ் என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் நீண்ட காலமாக மின்சார ஊழியர் சங்கத்திலும், மின்சார ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் இந்திய மின் ஊழியர் கூட்டமைப்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும், தொழிற்சங்க இயக்கத்திலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியவர். 99 வயதை அடைந்து அவர் மரணம் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதுடன் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.