×

காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 டன் அரிசி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பெருநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில், கொரோனா நிவாரணமாக 3 டன் அரிசி வழங்கப்பட்டது. காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி தலைமை தாங்கி, 550 தூய்மைப் பணியாளர்களுக்கு வினியோகம் செய்ய 3 டன் அரிசி மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை காஞ்சிபுரம் பெருநகராட்சி பொறியாளர் மகேந்திரனிடம் வழங்கினார். காஞ்சிபுரம் நகர செயலாளர் மகேஷ் வரவேற்றார். மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அருள், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஏகாம்பரம், நகர பொருளாளர் உமாசங்கர், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர், நிர்வாகிகள் ராமானுஜம், குமார், வெங்கடேசன், சரவணன் இளவேனில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தில் வறுமையில் வாடும் 20 குடுகுடுப்பைக்காரர் குடும்பங்களுக்கு திருக்கழுக்குன்றம் நீதிமன்ற வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டன. மாஜிஸ்திரேட் யுவராஜ் கலந்து கொண்டு, அரிசி, காய்கறிகளை வழங்கினார். இதில், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் , வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மணிகண்டன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchi West District Mathimukha , Kanji, mdmk sweepers
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை