×

நண்பர்களுடன் கிணற்றில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாப பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த வாலிபர், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யசீலன். இவரது மகன் வருண்(30). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் மாலை தனது நண்பர்களான சிவகுமார், ராமராஜ், மூர்த்தி, வினோத் ஆகியோருடன், முருக்கஞ்சேரி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

இதில் நீச்சல் தெரியாத வருண் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து அவரது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வருண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் . இதுகுறித்து தகவலறிந்து திருவள்ளூர் தீயணைப்பு வீரர்களுடன் மணவாளநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து வருண் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணவாளநகர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : friends ,well , Friends, well, drowns and drowns
× RELATED கன்னியாகுமரி அருகே ஆபாசமாக திட்டியதால் கீழே தள்ளி கொன்றோம்