×

நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் :ப. சிதம்பரம் ட்வீட்

சென்னை : ரிசர்வ் வங்கி நீரவ் மோடி, மெகுல், மல்லையாவின் பெயர்களை பேரேட்டில் எழுதி கடன்களை வசூலிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களின் கடன் ரூ. 68,000 கோடியை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்தது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதாகவும் இதற்கு நிதியமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி நேற்று கூறியிருந்தார். ரிசர்வ் வங்கி வெளியிட்ட கணக்கு நீக்கல் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்பட பாஜகவின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால்தான் நாடாளுமன்றத்தில் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், ஒரு நையா பைசா கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினார். மேலும் கணக்கில் இருந்து நீக்குதலுக்கும், தள்ளுபடிக்கும் நிறைய வேறுபாடு உள்ளதாகவு இந்த வேறுபாடு குறித்து ப.சிதம்பரத்திடம் சிறப்பு வகுப்புக்கு சென்று ராகுல்காந்தி பாடம் கற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்.இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா!.இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு.ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும்.மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags : Neerav Modi ,Mukul ,Mallya ,Chidambaram ,Bearer , PM Modi, Neerav Modi, p. Chidambaram, BJP, Mukul Choksi, Reserve Bank, Vijay Mallya
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...