×

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது

வேளச்சேரி: மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல், பெரியார் நகர், 9வது தெருவை சேர்ந்தவர் கிரிதரன் (24). எலக்ட்ரீசியன். இவரது தம்பி லட்சுமணன் (20). சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமணன் கடந்த 21ம் தேதி அதே பகுதியில் தெருவில் நடந்து சென்றபோது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தலையில் அடித்தது தொடர்பான பிரச்னையில், லட்சுமணன் அண்ணன் கிரிதரனை 8 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது. இதில் கடந்த 24ம் தேதி  பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் (19), புருசோத்தமன் (19), அஜய் (19), மணிகண்டன் (19) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.    தலைமறைவாக இருந்த நான்கு பேரை தேடி வந்தனர். நேற்று  பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜாஜி (25), வெங்கடேசன் (25), தாவித் ராஜா (25), சிவக்குமார் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Electrician , Four more arrested ,Electrician murder case
× RELATED எடப்பாடி பொய் பிரசாரம் 24 மணி நேரம்...