×

சென்னை மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக உயர்வு: 5 மண்டலங்களில் தொற்று அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ராயபுரம், திரு.வி.நகர், கோடம்பாக்கம், தண்டையார் பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய 5 மண்டலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று காலை 10 மணி நிலவரப்படி 673 ேபர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஒரு நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக திரு.வி.க நகரில் 128 பேரும், கோடம்பாக்கத்தில் 60 பேரும், அண்ணா நகரில் 65 பேரும், தண்டையார் பேட்டையில் 70 பேரும், தேனாம்பேட்டை 81, அடையாறு 19, பெருங்குடியில் 9 பேரும், வளசரவாக்கத்தில் 26 பேரும், திருவொற்றியூரில் 15 பேரும், மாதவரத்தில் 4 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மணலி 1 மற்றும் அம்பத்தூரில் 19 நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 204 பேர் குணமடைந்தும், 455 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 13 பேர் இறந்துள்ளனர்.
மேலும் ராயபுரம், திரு.வி.க நகர், கோடம்பாக்கம், தண்டையார் பேட்டை, தேனாம்பேட்டை அண்ணாநகர், அடையாறு, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags : influx ,metropolis ,Chennai , City of Madras, Corona
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!